நடிகை சாந்தி வில்லயம்ஸ் என்றதும் சிலருக்கு சீரியல்கள் ஞாபகம் வரும். பலருக்கு அவர் நடித்த படங்கள் நினைவிற்கு வரும். சித்தி, மெட்டி ஒலி, வாணி ராணி என சீரியல்களில் நடித்திருக்கிறார்.
மாந்தோப்பு கிளியே படம் மூலம் தமிழுக்கு வந்தார். உதயா, ஜோடி, டும் டும் டும், பாபநாசம் என பல படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல கேமரா மேன்.
1974 ல் அவரை திருமணம் செய்துகொண்டார். மெட்டி ஒலி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாராம்.
தன் நான்கு குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். படங்களுக்காக நிறைய போராடியிருக்கிறார். இதனால் அவர் வைத்திருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தாராம்.
கணவன் இறந்ததை இன்னும் தன்னால் தாங்க முடியவில்லை என்கிறார் சாந்தி. வறுமையில் இருந்த போது ராதிகா, இயக்குனர் திருமுருகன், சித்திக் ஆகியோர் தான் உதவி செய்தார்களாம்.