எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக எதிர்த்து வளர வேண்டும் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு.
அவருக்கு என்று எங்கிருந்து தான் பிரச்சனைகள் வரும் என்பது தெரியாது, ஆனால் அதற்கெல்லாம் அவர் துவண்டு போகவே இல்லை. இப்போது வெங்கட் பிரபு, கார்த்திக் நரேன் என்று அடுத்தடுத்து வெற்றிபட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து அசத்தி வருகிறார்.
தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் இந்த ஜோடி இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது நித்யா-பாலாஜி தம்பதி தான். வீட்டைவிட்டு வெளியே வந்த நித்யா ஒரு பேட்டியில், எங்களது பிரச்சனை தெரிந்து கொண்டு நடிகர் சிம்பு என்னிடம் 1 மணிநேரம் பேசினார். ஆனால் அவரால் என்னை சமாதானம் செய்ய முடியவில்லை, நான் எனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டேன்.
அதற்கு அவர் அடப் போமா என்று வெறுத்து போனை கட் செய்துவிட்டார் என்றார்.