அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைக்காலத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 32 பேஸ்புக் கணக்குகளையும் சில பக்கங்களையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கி இருப்பதாகவும் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றும் கூறுகிறது பேஸ்புக் நிறுவனம்.