ஐரோப்பிய நாடுகளில் தற்போது காற்றில் வெப்ப அலைகள் வீசுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் 1864 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் கோடை கால வெப்பம் பதிவாகியுள்ளது.
எனவே வெப்ப அலைகளில் இருந்து தங்களது செல்ல பிராணியான நாய்களை காக்க ´ஹாட் டாக் கேம்பைன்´ எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஜூரிச் நகர பொலிஸார் தொடங்கி உள்ளனர்.
நாய்களை வெளியே அழைத்து செல்வதற்கு முன்பு வெப்ப அளவு எவ்வளவு என்பதை அறிய தங்களின் கைகளை 5 நொடிகள் தொடர்ந்து நிலத்தில் வைத்து பரிசோதியுங்கள். வெப்ப அலைகளில் இருந்து நாய்களை காக்க அவற்றுக்கும் ´ஷு´ அணியுங்கள்.
வீதிகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாக இருக்கும் எனவே உங்கள் 4 கால் நண்பர்களை காக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலரும் பாராட்டியுள்ளார்.