கடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
நேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வெளியில் வந்த ரஜினியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ‘சாமி தரிசனம் செய்யவே வந்தேன். பேட்டியளிக்கும் எண்ணம் இல்லை’ என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.
காசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.