சீரியல் நடிகை நிலானியை நண்பர் லலித்குமார் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்து, பின் இந்த பிரச்சனையில் அவர் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையானது.
அதன்பின் நிலானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரும் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள புதிய பேட்டியில் காந்தி குடும்பத்தினர் சொன்ன குற்றச்சாட்டுகள் பற்றி பேசியுள்ளார்.
“எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள். தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள்.. நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். அது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.. கொடுக்கவேண்டிய இடத்தில் பணம் கொடுத்து போய்கிட்டே இருந்திருப்பேன்” என கூறியுள்ளார் நிலானி.
மேலும் பேசிய அவர் “நடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள். அதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி உண்மையாக்கினார்” என நிலானி கூறியுள்ளார்.