இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
அந்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சாசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது.