பிரபல கன்னட நடிகர் தேஜஸ் கவுடா தற்போது Chikkaballapur பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளர். அவர் மீது பிரபல டிவி நடிகை ஒருவர் அளித்த கற்பழிப்பு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஒன்றாகவே கல்லூரி படித்துள்ளனர். நண்பர்களாக பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். 2012 அந்த பெண்ணை இவர் கற்பழித்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை உறவு கொண்டுள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரும் டிவியில் பணியாற்ற துவங்கியுள்ளனர். 2018ல் அந்த நடிகை கர்பமானதால் அதை கலைத்துவிடும்படி தேஜஸ் கூறியுள்ளார்.
தற்போது தேஜஸுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இதை அறிந்த அந்த டிவி நடிகை தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.