ஜெர்மனியில் மேற்கு பொமரேனியா என்ற சுற்றுலா தலம் உள்ளது. அங்கு ஒரு பெண் தனது கணவருடன், இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்தார். அங்குள்ள வனப்பகுதி இருவரும் வந்து கொண்டிருந்தபோது அந்த பெண் தனது மார்பில் ஏதோ ஒன்று தாக்கியது போன்று உணர்ந்தார்.
உடனே, வாகனத்தை நிறுத்தி பார்த்த போது ஒரு துப்பாக்கி குண்டு கீழே கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் பார்த்தபோது, தூரத்தில் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததை கவனித்தார். அவர்தான் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருப்பார் என்று சந்தேகித்த அந்த பெண், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, பன்றியை சுட்ட போது குண்டு குறி தவறி பெண்ணின் மார்பில் பாய்ந்தது தெரிய வந்தது. ஆனால் நல்ல வேலையாக அப்பெண் அணிந்திருந்த ‘பிரா’ அவரை காப்பாற்றியது.
அதாவது ‘பிரா’வில் இருந்த மெல்லிய உலோக தகடு கேடயம் போல் இருந்து அந்த குண்டை தடுத்து இருக்கிறது. அதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். இதற்கிடையே போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தனர்.