பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சரவணன். அந்த படத்திற்கு பிறகு பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
தனது சினிமா பயணத்தில் நல்ல இடத்தை பிடிக்க அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க நினைத்தார். நிகழ்ச்சியில் அவர் நன்றாக விளையாடி வர திடீரென அவர் எந்த காரணமும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்றதும் அழுதவர்கள் கவின்-சாண்டி.
இருவரும் அண்மையில் சரவணன் மற்றும் அவரது மகனை சந்தித்துள்ளனர்.