பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
இது பற்றி அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மிக உருக்கமாக பேசினார். “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போது நான் மிகவும் சோகமாக வந்தேன். ஆனால் அங்கிருந்து செட்டுக்கு வந்ததும் மக்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ் பார்த்து மகிழ்ச்சியாகிவிட்டேன்.”
“கைத்தட்டுவது பாராட்டுவது ஒருபுறம் இருந்தாலும் சிலர் நான் வெளியேறியதற்காக கண்ணீர் விட்டனர். இது ரொம்ப பெரிய விஷயம்” என உருக்கமாக பேசியுள்ளார் அவர்.