புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக திகழுமாறு மாநில அரசு விடுத்த வேண்டுகோளை நடிகர் அமிதாப்பச்சன் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், நேற்று மும்பையில் அவரை மந்திரி சுதீர் முங்கண்டிவார் சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர், இதுபற்றி சுதீர் முங்கண்டிவார் தனது டுவிட்டரில் கூறும்போது, ‘‘காடு மற்றும் புலிகள் மீது அமிதாப்பச்சன் கொண்டிருக்கும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு பூரித்து விட்டேன். அவர் மூலம் புலிகளுக்கு நல்ல நாட்கள் காத்திருக்கின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.