மும்பையில் உள்ள தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடியுள்ளார் பிரபல நடிகர் ஷாருக் கான்.
மஹாராஷ்டிரம் மாநிலம் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்நிலையில் மன்னாட் என்கிற தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு மூடியுள்ளார் ஷாருக் கான். கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக இதுபோல செய்ததாகக் கூறப்பட்டாலும் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதற்காக இதுபோன்று கட்டடத்தை மூடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் பெருமழையின்போது தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த பங்களாவில் தனது மனைவி கெளரி கான், மகள் சுஹானா, மகன்கள் ஆர்யன், ஆப்ராம் ஆகியோருடன் ஷாருக் கான் வசித்து வருகிறார்.
கடைசியாக, 2018 இல் ஷாருக் கான் நடிப்பில் ஜீரோ படம் வெளியானது. அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.