தென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஒரே வாரத்தில் 3 ஆவது ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கிறாா்.
நிரூபிக்கப்படாத ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி மாா்ட்டின் விஸ்காராவை பாராளுமன்றம் கடந்த 10 ஆம் திகதி தகுதி நீக்கம் செய்தது.
அதனைத் தொடா்ந்து, அதிகம் அறியப்படாத மானுவல் மெரீனோ இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்த நிலையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஃபிரான்சிஸ்கோ சகாஸ்டி (76) புதிய ஜனாதிபதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.