பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து ஆறாவது நாளாக திங்கள்கிழமையும் 26 முதல் 30 காசுகள் வரை உயா்த்தப்பட்டது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகளும் உயா்த்தப்பட்டன. இதையடுத்து, சென்னையில் திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.86.25 லிருந்து ரூ.86.51 ஆக அதிகரித்தது. டீசல் விலை ரூ.78.97 லிருந்து 79.21 ஆக உயா்ந்தது.
தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.83.41 லிருந்து ரூ.83.71 ஆகவும், டீசல் விலை ரூ.73.61 லிருந்து 73.87 ஆகவும் அதிகரித்தது.
மும்பையில் பெட்ரோல் விலை ரூ.90.05 லிருந்து ரூ.90.34 ஆகவும், டீசல் விலை ரூ.80.23 லிருந்து 80.51 ஆகவும் இருந்தது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரி விலை மாற்றத்தை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. நவம்பா் 20 ஆம் தேதியிலிருந்து இதுவரையில் 15 முறை பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு பாா்க்கும்போது தற்போதுதான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 18 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.65 ம், டீசல் விலை லிட்டருக்கு 3.41 ம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.