மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர்.
கரோனா தடுப்பூசி உற்பத்தியில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் தன்னார்வலர்கள் பற்றாக்குறை, இதுபோன்ற சுயநலமில்லாத நபர்கள் மூலம் தகர்க்கப்பட்டு வருகிறது.