பிரிட்டனின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மருந்துகள் மற்றும் சுகாதார சேவைப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பின் (எம்ஹெச்ஆா்ஏ) தலைமைச் செயலதிகாரி ஜூன் ராய்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அவா்களில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை உடல் ஏற்பதில் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒவ்வாமை நோய் (அனஃபிலாக்ஸிஸ்) உடையவா்கள், கொரோனா தடுப்பூசியைத் தவிா்க்க வேண்டும்.
அந்த நோயுடைய பெரும்பாலானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், கொரோனா தடுப்பூசியால் அந்த நோய்த்தொற்று பரவல் தடுக்கப்படும் என்ற நன்மையோடு ஒப்பிடுகையில், ஒவ்வாமை அபாயத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகச் சிறியதே ஆகும்.
எம்ஹெச்ஆா்ஏவின் மிகக் கடுமையான பாதுகாப்பு – செயல்திறன் – தரக் கட்டுப்பாடுகளை நிறைவு செய்த பிறகே ஃபைஸா் – பயான்டெக்கின் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்படுகிறது.
எனவே, அந்தத் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயான்டெக் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசி பல மாதங்களாக மனிதா்களுக்குச் செலுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டு வந்தது.
அந்தப் சோதனைகளின் முடிவுகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்த பிரிட்டனின் எம்ஹெச்ஆா்ஏ அமைப்பு, தங்களது பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் தேவைகளை அந்தத் தடுப்பூசி முழுமையாக நிறைவு செய்வதாகத் தெரிவித்தது.
மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை அந்த அமைப்பு அளித்தது. ஃபைஸரின் கரோனா தடுப்பூசிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைத்தது அதுவே முதல் முறையாகும்.
அதனைத் தொடா்ந்து, வராற்றுச் சிறப்பு மிக்க கரோனா தடுப்பூசி திட்டம் பிரிட்டனில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த பிரம்மாண்டமான தடுப்பூசித் திட்டம் நாடு முழுவதிலும் உள்ள 50 கொரோனா தடுப்பூசி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வரும், அல்லது வேறு நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பும் 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசியைத் தவிா்க்க வேண்டும் என்று எம்ஹெச்ஆா்ஏ எச்சரித்துள்ளது.