உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, கூடுதலாக 25 கோடி டொலரை (சுமாா் ரூ.1,842 கோடி) பில்கேட்ஸ் அண்டு மெலிண்டா அறக்கட்டளையை நன்கொடையாக அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளையை நிறுவிய மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளில் உதவுவதற்காக, மேலும் 25 கோடி டொலா் நன்கொடை அளிக்கப்படவுள்ளது.
அதில் ஒரு பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.