நடிகர் அமிதாப்பச்சன் (72) ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு கருத்து வெளியிட்டு வருகிறார். டுவிட்டரில் அவரை சுமார் ஒன்றரை கோடி அபிமானிகள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இன்று அவரது டுவிட்டரை சைபர்கிரைம் குற்றவாளிகள் முடக்கி அதில் ஆபாச வீடியோ பரவவிட்டனர். இதைப் பார்த்த அமிதாப்பச்சன் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்து புகார் செய்தார்.
இந்த சர்ச்சை ஒய்வதற்குள்ளாக, கடந்த ஒரு ஆண்டாக தன்னை திட்டி ஆபாசமான எஸ்.எம்.எஸ். வருவதாகவும், உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் மும்பை போலீசில் புகார் கொடுத்திருப்பதாக அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.