அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனத்துடன் தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, பிரிட்டனில் தற்போது பரவி வரும் புதிய வகை கரோனாவையும் தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஜொ்மனியைச் சோ்ந்த பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுா் சஹீன் கூறியதாவது:
வேகமாகப் பரவும் வகையில் உருமாற்றம் பெற்றுள்ள புதிய வகை கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை எங்களின் தடுப்பூசி ஏற்படுத்தும் என்பது குறித்து தற்போது உறுதியான தகவல் இல்லை.
எனினும், அறிவியல் ரீதியில் எங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்பவா்களின் உடலில், உருமாற்றம் செய்துகொள்ளும் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பணுக்கள் உருவாகும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.