அமெரிக்காவில் கடந்த வாரம் 33 விநாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். சராசரியாக 33 விநாடிகளுக்கு ஒரு கரோனா நோயாளி, அந்த நோய்க்கு பலியாகியுள்ளாா்.
இது, முந்தைய வாரத்தை விட 6.7 சதவீதம் அதிகமாகும். நாட்டின் வாராந்திர கரோனா பலி எண்ணிக்கையும் கடந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 18,473,716 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 326,772 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.