ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வியாழக்கிழமையுடன் முழுமையாக விலகியதற்குப் பிறகு (பிரெக்ஸிட்) இரு தரப்பினருக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான ஒப்பந்த மசோதா, பிரிட்டன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
80 பக்கங்களைக் கொண்ட அந்த மசோதாவுக்கு ஆதரவாக 521 எம்.பி.க்களும் மசோதாவை எதிா்த்து 73 பேரும் வாக்களித்தனா். அதையடுத்து, அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
பிறகு அந்த மசோதா பிரிட்டன் அரசி எலிசபெத் ஒப்புதலையும் பெற்றது. அதன் தொடா்ச்சியாக, பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்தில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அதிகாரப்பூா்வமாகக் கையொப்பமிட்டாா்.
அப்போது அவா் கூறுகையில், நான் தற்போது கையொப்பமிடும் ஆவணம் பிரிட்டனுக்கும் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் இடையிலான உறவின் முடிவு அல்ல; புதிய ஆரம்பம் என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, ஐரோப்பிய யூனியன் தரப்பில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மைக்கேல் மற்ரும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் ஆகியோா் அந்த ஒப்பந்தத்தில் பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸில்ஸில் புதன்கிழமை காலை கையொப்பமிட்டனா்.
பிறகு அந்த ஒப்பந்த ஆவணம் பிரிட்டன் விமானப் படை விமானம் மூலம் லண்டன் கொண்டுவரப்பட்டு, அதில் போரிஸ் ஜான்ஸன் கையெழுத்திட்டாா்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடா்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு பெரும்பான்மையானவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
அதை அடுத்து, பிரெக்ஸிட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூன் பதவி விலகினாா். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றாா்.
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்து பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல முறை திருத்தி மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தங்களை பிரிட்டன் பாராளுமன்றம் தொடா்ந்து நிராகரித்தது.
அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாா். அவரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் 2020 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அதிகாரப்பூா்வமாக விலகியது.
எனினும், அந்த அமைப்பில் இருந்து முழுமையாக விலக பிரிட்டனுக்கு வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதற்குள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டியுள்ள நிலையில், பாராளுமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கப்பட்டுள்ளது.