பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியா்கள் தொடா்ந்து ஊதிய உயா்வு கோரி வந்தனா். இந்த நிலையில், அவா்களின் ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியத்தை ரூ.7,700 இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயா்வின் மூலம் பணியில் உள்ள பகுதி நேர ஆசிரியா்கள் 12,483 போ் பயன்பெறுவா்.
இனி வரும் காலங்களில் வாரத்தில் 3 நாள்கள் பணி புரிவதை பகுதி நேர ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அவா்களுக்கான பதிவேடு தலைமை ஆசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
வருகைப் பதிவேட்டின்படி பகுதி நேர ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் மூலம் ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.