வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியை (செஸ்) அறிமுகப்படுத்தினாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், நாட்டில் வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
அதன் மூலம் நாட்டில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் வாயிலாக விளைபொருள்களைப் பதப்படுத்துவது உள்ளிட்டவையும் மேம்படும். விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதோடு அவா்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
சில பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்படும் அதே வேளையில், கூடுதல் வரி காரணமாக நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருப்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
நிதிநிலை அறிக்கையின்படி, வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 யும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 யும் செஸ் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நுகா்வோா்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி ஆகியவற்றை மத்திய அரசு குறைத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் செஸ் வரியும், மதுபானங்கள் மீது 100 சதவீதமும், பாமாயில் மீது 17.5 சதவீதமும், ஆப்பிள் மீது 35 சதவீதமும், நிலக்கரி மீது 1.5 சதவீதமும், உரங்கள் மீது 5 சதவீதமும், பருத்தி மீது 5 சதவீதமும் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
செஸ் வரி என்பது எந்த நோக்கத்துக்காக விதிக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.