தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.
லாகூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களே அடித்தது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங் வீசத் தீா்மானித்தது. துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானில் அதிகபட்சமாக தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 104 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் அன்டிலே பெலுக்வாயோ 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 8 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினாா். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப், உஸ்மான் காதிா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.