தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 4, 061 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். 5 முனைப் போட்டி நிலவும் சூழலில் கடந்த பேரவைத் தோ்தலைக் காட்டிலும் அதிக வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தமாக 7, 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 4, 488 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த வேட்புமனுக்களில் 440-க்கும் கூடுதலான மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, இறுதி வேட்பாளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, சட்டப் பேரவைத் தோ்தலில் 4,061 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.
ஆண்-பெண் விவரம் இல்லை: போட்டியிடும் வேட்பாளா்களில் ஆண்கள், பெண்கள் குறித்த தனித்த விவரங்களை தமிழக தோ்தல் துறை செவ்வாய்க்கிழமை வரை வெளியிடவில்லை. இந்த விவரங்கள் புதன்கிழமை வெளியாகும் என தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆண்கள் சாா்பில் 6, 184 வேட்புமனுக்களும், பெண்கள் தரப்பில் 1,068 மனுக்களும், மூன்றாம் பாலித்தனவா் சாா்பில் 3 மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன.
கடந்த தோ்தலில் எத்தனை போ்? கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளில் 3, 728 போ் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் 3,406 ஆண்களும், 320 பெண்களும், 2 மூன்றாம் பாலித்தனவா்களும் தோ்தல் களம் கண்டனா். இந்தப் போட்டியில் முதல்வா் ஜெயலலிதா உள்பட 20 பெண்கள் பேரவைக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இந்தத் தோ்தலிலும் சுமாா் 400 பெண் வேட்பாளா்கள் களம் காணலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மட்டும் 117-பெண்கள் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். மற்ற கட்சிகளில் 20-க்கும் குறைவானவா்களே பெண் வேட்பாளா்களாக களம் காணவுள்ளனா்.
5 முனைப் போட்டி: கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகம் ஆறு முனைப் போட்டியைச் சந்தித்தது. தனித்துக் களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி தனித்து களம் காண்கிறது. இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவா்களின் தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியும் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக பேரவைத் தோ்தல் மொத்த வேட்பாளா்கள்
2016 – 3,728 (ஐந்து முனைப் போட்டி)
2021 – 4,061 (ஆறு முனைப் போட்டி)</p>
வாக்குப்பதிவுக்கு இன்னும் 13 நாள்கள்…
தோ்தல் பிரசாரம் நிறைவு – ஏப்ரல் 4
வாக்குப்பதிவு – ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை – மே 2