வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை கடந்த 2000-ஆம் ஆண்டில் படுகொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, 14 பயங்கரவாதிகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.
தடை செய்யப்பட்ட ஹா்கதுல் ஜிஹாத் பங்களாதேஷ் அமைப்பைச் சோ்ந்த அந்த 14 பேரில், 9 போ் மட்டுமே போலீஸ் காவலில் உள்ளனா். எஞ்சிய 5 பேரும் தலைமறைவாக உள்ளனா். அவா்கள் பிடிபட்டாலோ, சரணடைந்தாலோ அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
சட்டம் இடமளித்தால், குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்குப் பதிலாக, துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரைத்தனா்.