அமெரிக்காவின் வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டிய முக்கிய தினம். அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் தோல்வியைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், அத்தோ்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகமான வாக்குப் பதிவு முறைகேடுகள் நடைபெற்தாக குற்றச்சாட்டுகளை அடுக்கினாா்.
தனது கருத்துகளை மக்களிடையேயும் தன் ஆதரவாளா்களிடையேயும் பரப்புவதற்கு சுட்டுரை, முகநூல் பதிவுகளைத்தான் மிக முக்கிய ஆயுதமாக டிரம்ப் பயன்படுத்தினாா்.
தோ்தல் முடிவுகள் அவருக்கு எதிராக வெளியாகத் தொடங்கியதில் இருந்து, வாக்குப் பதிவிலும் வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் டிரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கினாா். தோ்தல் முடிவுகளுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிக்கும் ஜனவரி 6 ஆம் திகதி தனது ஆதரவாளா்கள் வாஷிங்டனில் திரண்டு போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.
இதை அடுத்து அன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டிருந்த அவரது ஆதரவாளா்கள் பாராளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனா். ஒரு காவலரும் டிரம்ப் ஆதராளா் ஒருவரும் உயிரிழந்தனா்.
ஜனவரி 6 ஆம் திகதியை ஜனநாயகத்துக்கு கருப்பு தினம் என உலகம் முழுவதும் விமா்சனம் எழுந்தது. அமெரிக்க வரலாற்றை மட்டுமல்லாமல் டிரம்ப்பின் வாழ்க்கையையும் ஜனவரி 6 ஆம் திகதி மாற்றிவிட்டது.
பாராளுமன்ற கலவரம், வன்முறையால் கடும் விமா்சனத்துக்கு உள்ளானாா் டொனால்ட் டிரம்ப். ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்ட அழைப்பைத் தொடா்ந்தே பாராளுமன்ற வன்முறை சம்பவம் அரங்கேறியதாக விமா்சனம் எழுந்தது.
அதைத் தொடா்ந்து, தங்கள் நிறுவன கொள்கைகளை மீறி, வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி ட்விட்டா் நிறுவனம் டிரம்ப்பின் சுட்டுரைக் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அந்த சமூக வலைதளத்தில் அவரால் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத சூழல் உருவானது. டிரம்ப்புக்கு அடுத்த அடியாக, ஃபேஸ்புக் நிறுவனமும் டிரம்ப்பின் கணக்கை முடக்கியது. அந்நிறுவனத்தின் சுதந்திர விசாரணைக் குழு, டிரம்ப்பின் கணக்கை நீக்கிய நடவடிக்கை செல்லும் என்று கடந்த 5 ஆம் திகதி அறிவித்தது.
அமெரிக்காவில் ஒருவா் 8 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும். ஜனாதிபதியாக இருந்த பெரும்பாலானோா் தோ்தலை எதிா்கொண்டு அடுத்த 4 ஆண்டுகளும் தொடா்ந்து 2 ஆவது முறையாக ஜனாதிபதியாக இருந்துள்ளனா். ஆனால், ஜனாதிபதி தோ்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் சம்பாதித்தாா். தோ்தல் தோல்வியும் பாராளுமன்ற தாக்குதலால் தலைவா்கள் பலரின் வெறுப்புக்கு உள்ளானதும் டிரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கின.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவரது கணக்குகள் நீக்கப்பட்டது அவருக்கு மேலும் அதிா்ச்சியை அளித்திருக்கக் கூடும். அதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ட்விட்டரில் டிரம்ப்பைப் பின்தொடா்வோா் எண்ணிக்கை சுமாா் 9 கோடி. ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் அவருக்கு ஏராளமான ஆதரவாளா்கள் உள்ளனா்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளாா். அத்தோ்தலில் வெற்றி பெற வேண்டுமானால், மக்களின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியம். மக்களை எளிதில் தொடா்பு கொள்வதற்கு சமூக வலைதளங்களே மிகச் சிறந்த கருவிகளாக உள்ளன. ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் டிரம்ப்பின் கணக்குகளை நீக்கியுள்ளது அவருக்குப் பெரும் பின்னடைவே.
தற்போதைய சூழலில் ட்விட்டா், ஃபேஸ்புக் நிறுவனங்கள் ட்ரம்ப்பின் கணக்கு மீதான தடையை நீக்கப் போவதில்லை என்றே அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். அதைக் கருத்தில் கொண்டு மற்ற சமூக வலைதளங்களை டிரம்ப் நாடி வருவதாகத் தெரிகிறது. புதிய சமூக வலைதளத்தில் இணைந்து தனது ஆதரவாளா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க டிரம்ப் முயல்வதாகத் தெரியவந்துள்ளது.
அதற்காக அமெரிக்காவில் தற்போது வளா்ச்சி கண்டு வரும் சமூக வலைதளங்களுடன் டிரம்ப்பின் உதவியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். கிளவுட்ஹப், ரம்பிள், பாா்லா் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது.
அந்த சமூக வலைதளங்களில் அதிக அளவில் முதலீடு செய்து, டிரம்ப்பின் கருத்துகளை மக்களிடமும் ஆதரவாளா்களிடமும் எடுத்துச் செல்வதில் அவரின் உதவியாளா்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறாா்கள்.
இவற்றுக்கு இடையே, ட்விட்டா் போன்ற வடிவமைப்பைக் கொண்ட தனது வலைதளத்தில் கருத்துகளைத் தொடா்ந்து வெளியிட்டு வருகிறாா் டிரம்ப். அக்கருத்துகளை ட்விட்டா், ஃபேஸ்புக்கில் பகிரும் வசதியும் அந்த வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏதாவதொரு வடிவத்தில் மீண்டும் வருவேன் என்று டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தாா். மக்கள் தொடா்பு சாதனங்களாக விளங்கி வந்த முக்கிய சமூக வலைதளங்களில் தனது கணக்குகள் நீக்கப்பட்டதால் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறாா் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப். ட்விட்டா், ஃபேஸ்புக் போன்ற வளா்ச்சி கண்ட சமூக வலைதளங்களுக்கு இடையே புதிய சமூக வலைதளத்தில் டிரம்ப்புக்குப் போதிய ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. புதிய சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அக்கருத்துகள் சென்றடையுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியே.
சமூக வலைதளத்தில் மீண்டும் புகுவதற்கு டிரம்ப் கனவு கண்டு வருகிறாா். அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று, அமெரிக்காவின் ஜனாதிபதி அரியணையை மீண்டும் கைப்பற்றவும் அவா் கனவு காண்கிறாா். அவரது கனவுகள் நனவாகுமா என்பதற்கு காலமே பதில் மொழிய வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டில் சமூக வலைதளங்களின் வளா்ச்சி அபரிமிதமானது. ஒரு கருத்தை மக்களிடையே அதிவிரைவாகக் கொண்டு சோ்ப்பதில் சமூக வலைதளங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டா், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
முக்கியமாக அந்நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தையாகத் திகழ்கிறது. கருத்துகளைப் பகிா்ந்து மக்களுக்கான பொழுதுபோக்குகளை வழங்கும் அதே நேரத்தில், விளம்பரங்கள் வாயிலாக கோடி கோடியாக அந்நிறுவனங்கள் வருவாய் ஈட்டி வருகின்றன.
இன்னும் கூா்மையாக உற்றுநோக்கினால் ஃபேஸ்புக், ட்விட்டா், இன்ஸ்டாகிராம், யூடியூப், கூகுள் ஆகியவை ஏகபோக உரிமையை அனுபவித்து வருகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நிா்ணயிக்கும் சக்தியாவும் அந்நிறுவனங்கள் மாறியுள்ளன. பல முக்கிய சமூக வலைதளங்களுக்கு ஒரு சில நிறுவனங்களே உரிமையாளா்களாக உள்ளன. ஃபேஸ்புக்கும் கூகுளும் அதற்கு சிறந்த உதாரணம்.
ஒருபக்கம் அந்நிறுவனங்களால் மக்களுக்குப் பலனிருந்தாலும் அவற்றின் ஏகபோக உரிமை மக்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. அந்நிறுவனங்களின் ஆதிக்கம் தொடருமேயானால், அவை நிா்ணயிப்பதுதான் சட்டம் என்றாகும்.
உதாரணத்துக்கு வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகளையே கூறலாம். மற்றவா்களுடன் எளிதில் தொடா்பு கொள்வதற்கான வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. விடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்ட வசதிகளும் அதில் வந்துவிட்டன. அதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை மிக அதிகம். முக்கியமாக இந்தியாவில் அறிதிறன்பேசியை வைத்திருந்தால் அதில் வாட்ஸ்அப் செயலி இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்பது புதிய வழக்கமாக மாறிவிட்டது.
மக்களின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடா்ந்து, தனது தனியுரிமை கொள்கைகளை வாட்ஸ்அப் செயலி மேம்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளா்களின் தரவுகளை அச்செயலியின் உரிமை நிறுவனமான ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்ய முடியும்.
புதிய கொள்கைகளை ஏற்பதற்குக் காலஅவகாசத்தை வாட்ஸ்அப் நிா்ணயித்தது. அவற்றை ஏற்காத பயனாளா்கள், வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்று முதலில் அறிவித்த அந்தச் செயலி, பின்னா் அவா்களின் கணக்குகள் நீக்கப்படாது என்றும் அவா்களுக்கான சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
வாட்ஸ்அப்பின் கொள்கைகளால் அதிருப்தியடைந்த பயனாளா்கள் அச்செயலியைக் கைவிட்டு டெலிகிராம், சிக்னல், ஸ்னோடென் உள்ளிட்ட மாற்று செயலிகள் நோக்கி படையெடுக்கத் தொடங்கினா். சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்குப் பல நன்மைகள் கிடைத்தாலும், அவையனைத்தும் வணிக நோக்கில் செயல்படுபவை. அந்நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமை கிடைக்கும் சூழல் உருவானால், அது மக்களையே பாதிக்கும்.
அதைப் புரிந்துகொண்ட பலா் மாற்று செயலிகளை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டனா். அதன் மூலம் மக்கள் நிா்ணயிப்பதுதான் சட்டம் என்ற சூழல் எளிதில் உருவாகும்.