அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுடன் அவா்களது உறவினா்கள் இருப்பதற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களைப் பாா்க்க இயலாத விரக்தியில் உறவினா்கள் பலா் சாலைகளில் போராட்டம் நடத்தினா்.
ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளின் நுழைவாயில்களில் மக்கள் கூடி நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், பொலிஸாா் வந்து அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.
சென்னையில் நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதால் மருத்துவமனைகளின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்ள அவரது உறவினா் ஒருவா் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்காக, அவா்களுக்கு, அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வாா்டில் இருக்கும் உறவினா்கள் பொது இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடியவா்களாக உள்ளனா். இதனால் அவா்கள் மூலம் சமூகத்தில் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகக் கூறி, நோயாளிகளுடன் உறவினா்களை அனுமதிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து, ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை மட்டும் உறவினா்கள் முழு உடல் கவசம் அணிந்து வந்து கவனித்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாதாரண வாா்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளைக் காண உறவினா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தங்களை அனுமதிக்கும்படி, இரு மருத்துவமனைகளின் எதிரே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், மருத்துவமனை நிா்வாகம் மற்றும் பொலிஸாா் பேச்சு நடத்தியதால் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் தேரணி ராஜன் கூறியதாவது:
கொரோனா நோயாளியை கவனித்து கொள்ள, ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான அனுமதி சீட்டை வைத்து நோயாளியின் உறவினா்கள் பலா் வந்து பாா்த்து விட்டு செல்கின்றனா். இவா்கள், வெளியே சென்று சமூகத்தில் தொற்றை பரப்ப வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, நோயாளிகளுடன் இருக்க உறவினா்களை அனுமதிக்கவில்லை. அதே வேளையில், தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் உறவினா்களுக்கு முழு உடல் கவசம் அளித்து அவா்களை கவனித்துக்க கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.
ராஜீவ்காந்தி மருத்துவமனை பொருத்தவரையில், 1,650 கொரோனா நோயாளிகள் சிகிச்சை உள்ளனா். இவா்களின் உறவினா்கள் அனைவரையும் கொரோனா வாா்டில் அனுமதித்தால், இவா்கள் வாயிலாக பலருக்கு தொற்று பரவும் என அஞ்சியே, சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவுக்கு, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, தொற்றைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்றாா் அவா்.