கொரோனா நோய் தொற்று பயமே மக்களிடம் அதிகம் உள்ளது. அன்றாடம் நோய் தொற்றிற்கு ஏகப்பட்டோர் பலியாவதால் இந்திய மக்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள்.
இப்போது ஒரு கன்னட நடிகரின் விபத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தேசிய விருது எல்லாம் வாங்கிய நடிகர் சஞ்சரி விஜய் சனிக்கிழமை இரவு பயங்கர பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூலையில் ஸ்கேன் செய்ததில் பிரச்சனைகள் இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
நேற்று இரவு கோமாவில் இருப்பதாகவும் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சஞ்சரி விஜய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.