திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்ட அனைவருமே நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் சென்றார்கள்.
மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் வெளியேறியதும், சிவகார்த்திகேயன் வெளியே வந்தார்.
அப்போது அங்கிருந்த கமல் இரசிகர்கள் எனச் சொல்லப்படும் சிலர், சிவகார்த்திகேயன் மீது திடீரென தாக்க முயன்றனர். இதனால் சிவகார்த்திகேயன் அங்கிருந்து வேகமாக காருக்கு சென்று விட்டார்.
இதனை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை இணையத்தில் பரப்பினார்கள். இந்த வீடியோ பதிவைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
பலரும் ட்விட்டர் தளத்தில் தாக்கியவர்களின் செயலைக் கண்டித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக கமல் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரது தரப்பிலும் இருந்து என்ன நடந்தது என தெரியப்படுத்துவர்கள் என்று கூறப்படுகிறது.