இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகப் பிரபலமான காதல் ஜோடி என்றால் அது வீராட் கோலி – அனுஷ்கா சர்மாதான். அதை மெய்பிக்கும் விதமாக அமைந்துள்ளது வீராட்டின் சமீபத்திய செயல்.
தற்போது லண்டனில் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார் அனுஷ்கா சர்மா. அவரை செப்டம்பர் 20, சந்திப்பதாக கோலி கூறியிருந்தார். ஆனால் அனுஷ்காவை ஆச்சிரியப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முன்பாகவே லண்டன் சென்றுவிட்டார் கோலி.
அனுஷ்கா படப்பிடிப்புக்கு செல்வதற்காக ஹோட்டலிலிருந்து வெளியே வந்தபோது மற்ற ரசிகர்களுடன் ஹோட்டல் வாசலில் காத்திருந்தார் கோலி. இதை சற்றும் எதிர்பார்க்காத அனுஷ்கா ஆச்சிரியத்தில் உறைந்து போனார்.
ஆனால் வீராட் கோலி அதற்கு ஒருபடி மேலே சென்று மற்ற ரசிகர்கள் போல அனுஷ்காவுடன் செல்பி எடுத்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளார். இதன் மூலம் ஒன்று மட்டும் உறுதி மற்ற பிரபலங்களின் காதல்போல் இவர்களின் காதல் பாதியிலேயே முறிந்துபோவ போவதுயில்லை.