நடிகை கே.ஆர்.விஜயா, கேரளாவில் விபத்தில் சிக்கியதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியை சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டார்கள். நடிகை மனோரமா இறந்து 2 நாட்கள் கூட ஆகவில்லை.
அதற்குள் இப்படி ஒரு மோசமான வதந்தி பரவியதால் திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கேரளாவில் உள்ள கே.ஆர்.விஜயாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் நலமாக இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
‘‘நான், இப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வருகிறேன். எனக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். மகாளய அமாவாசை அன்று என்னை பற்றி வதந்தி பரவியதை திருஷ்டி கழிந்து விட்டதாக எடுத்துக்கொண்டேன். என் உடல் நலத்தில் அக்கறை கொண்டு விசாரித்ததற்காக நன்றி’’. இவ்வாறு கே.ஆர்.விஜயா கூறினார்.