நடிகர் சங்க தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு செய்வதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்த வாக்குப்பதிவில் ஏராளமான நடிகர்களும், நடிகைகளும் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். மொத்தம் 3139 வாக்காளர்களில் 2607 வாக்குகள் மட்டுமே பதிவானது.
இந்த தேர்தலில் பல முன்னணி நடிகைகளான சமந்தா, ஸ்ருதிஹாசன், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா, காஜல், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாக்களிக்கவில்லை.
அனேகமாக தபால் மூலம் வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.