நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.
இந்த ஷோவில் அவர் செய்யும் விஷயங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அவர் காபி தூள் வேண்டும் என டீ தூளை எடுத்து ஒளித்து வைத்தது சில பிரச்சனைகளை முதல் வாரத்தில் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்தில் நடந்த திருடன் போலீஸ் போட்டியில் வனிதா விளையாடாமல் தவிர்த்தார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஷாரிக் வனிதாவிடம் சண்டை போட்டிருக்கிறார். அதன் பிறகு கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று வனிதா கதறி கதறி அழுதிருக்கிறார்.