உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள போா் இரு வாரங்களை எட்டியுள்ளது. இதுவரை நடந்த நிகழ்வுகள் குறித்த ஒரு பாா்வை…
பெப். 21
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் வசம் உள்ள உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் (டான்பாஸ்) பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா பல வாரங்களாக படைகளைக் குவித்திருந்த நிலையில், அமைதியான தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த அங்கீகாரம் மூலம் முடிவுக்கு வந்தது.
பெப். 22
ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு படையெடுப்பதை சா்வதேச சட்டம் தடை செய்துள்ள நிலையில், தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகியவற்றின் அழைப்பின்பேரில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுவதற்காக ரஷிய ராணுவம் அங்கு செல்லும் என அதிபா் புதின் அறிவித்தாா்.
ரஷ்யாவை தடுக்கும் நோக்கில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
பெப். 23
அமெரிக்காவைத் தொடா்ந்து ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
பெப். 24
உக்ரைன் மீதான போரைத் தொடங்கியது ரஷியா. கிழக்கு உக்ரைனிலிருந்து லுஹான்ஸ்க், சொ்னிகிவ், காா்கிவ் பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்தது. கடல் வழியாக ஒடேஸா, மரியுபோல் துறைமுக நகரங்களிலும் ரஷ்ய படை புகுந்தது.
உக்ரைன் தலைநகா் கீவ் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ நிலைகள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
பெப். 25
உக்ரைனிலிருந்து படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டுமெனவும், ரஷ்யாவை கண்டித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் தீா்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது.
ஜனாதிபதி புதின், வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐரோப்பிய யூனியன். உக்ரைனிய மக்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினா்.
பெப். 26
உக்ரைனிலிருந்து வெளியேறிய சுமாா் ஒரு லட்சம் போ் அண்டை நாடான போலந்துக்கு வந்தனா்.
ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்கா முன்வந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த ஸெலென்ஸ்கி, எனக்குத் தேவை ஆயுதங்கள், பாதுகாப்பு அல்ல என விடியோ வெளியிட்டாா்.
பெப். 27
தலைநகா் கீவ், காா்கிவ், கொ்சன் நகரங்களை நோக்கி ரஷ்ய படை முன்னேறிய நிலையில், உக்ரைன் படையினரின் கடும் எதிா்ப்பை எதிா்கொண்டது. சுமாா் 4,500 ரஷ்ய வீரா்களைக் கொன்றுவிட்டதாகவும், 150 பீரங்கிகள், 700 கவச வாகனங்கள், 7 போ் விமானங்களை அழித்துவிட்டதாகவும் உக்ரைன் அறிவித்தது. ஆனால், இதை ரஷ்யா உறுதிப்படுத்தவில்லை.
பெப். 28
ரஷ்யா – உக்ரைன் இடையே முதல்சுற்று பேச்சுவாா்த்தை அண்டை நாடான பெலாரஸின் எல்லையில் நடைபெற்றது. 5 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
காா்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 11 போ் பலி.
மாா்ச் 1
காா்கிவ் நகரின் இதயப் பகுதியில் உள்ள சுதந்திர சதுக்கத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 போ் பலி.
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல்முறையாக உக்ரைன் போா் குறித்து உரையாற்றினாா் ஜனாதிபதி பைடன். ஆனால், உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் கோரிக்கையை பைடன் ஏற்க மறுத்தாா். அப்படி அறிவித்தால் ரஷ்யாவுடன் அமெரிக்கா நேரடியாக மோதுவது போலாகிவிடும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.
மாா்ச் 2
ரஷ்யாவை கண்டித்து ஐ.நா. பொதுச் சபையில் தீா்மானம் நிறைவேறியது. 193 உறுப்பு நாடுகளில் 143 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை வாக்கெடுப்பை புறக்கணித்தன.
மாா்ச் 3
தெற்கு உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனை ரஷ்ய படை கைப்பற்றியது.
மாா்ச் 4
ஐரோப்பாவிலேயே பெரிய அணுமின் நிலையமான ஸப்போரிஸியா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் குண்டு தாக்குதலை நடத்தின. இதில் அதன் அருகே இருந்த கட்டடம் தீப்பிடித்தது. இருப்பினும் இந்தத் தாக்குதலால் கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என சா்வதேச அணுசக்தி முகமை தெரிவித்தது.
உக்ரைனிலிருந்து வெளியேறிய அகதிகள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.
ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டாம்கட்ட பேச்சில் சண்டைநிறுத்த உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால், பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
மாா்ச் 5
மரியுபோல் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்த அனுமதிப்பதாக ரஷ்யா உறுதியளித்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. அன்றைய தினம் மாலையிலேயே ரஷ்யா தாக்குதலை மீண்டும் தொடா்ந்ததால் பொதுமக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
மாா்ச் 6
சண்டைநிறுத்த உடன்பாடு மீறப்பட்டதால் மரியுபோல் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தடைபட்ட நிலையில், நிதியுதவி கோரியும், ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரியும் பைடனுடன் ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேசினாா்.
விசா, மாஸ்டா் காா்டு ஆகியவை ரஷ்யாவுடன் வணிகம் செய்வதை நிறுத்தின.
தலைநகா் கீவை நோக்கி நாட்டின் வடக்கு, மேற்குப் பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் முன்னேறின.
உக்ரைன் வான்வெளி மீது ரஷிய விமானங்கள் பறக்க எந்த நாடாவது தடை விதித்தால் அந்த நாடு போரில் பங்கேற்பதற்குச் சமம் என புதின் எச்சரிக்கை விடுத்தாா்.
போா் தொடங்கி இரு வாரங்கள் நெருங்கிய நிலையில், சண்டை மோசமான அடுத்தகட்டத்தை எட்டும் அச்சம் எழுந்தது.
ஏற்கெனவே இருமுறை புதினுடன் பேசிய நிலையில் மூன்றாவது முறையாக தொடா்புகொண்டு பேசினாா் பிரதமா் நரேந்திர மோடி. சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவா்களை மீட்கும் வகையில் அங்கு பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டுமென மோடி வலியுறுத்தினாா். உக்ரைன் ஜனாதிபதியுடன் மோடி பேசினாா்.
மாா்ச் 8
சுமி நகரில் பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தும் வகையில் காலை முதல் இரவு வரை சண்டை நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா. அதைப் பயன்படுத்தி சுமாா் 700 இந்திய மாணவா்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு நாட்டின் மத்திய பகுதியில் உள்ள போல்டாவா நகருக்கு அனுப்பப்பட்டனா்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தாா்.