மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி ஊறணி பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேரை 30 லீற்றர் பெற்றோல் உடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைகளை சம்பவ தினமான நேற்று பொலிசார் முற்றுகையிட்டனர். இதன் போது சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடை முதலாளிகளை கைது செய்ததுடன் 30 லீற்றர் பெற்றோலை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்படடவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.