கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
நேற்று (11) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று (12) பிற்பகல் றம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.
07 இளைஞர்கள் இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
றம்பொடை நீர்வீழ்ச்சியில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏழு இளைஞர்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர் காக்கும் படையினர் நான்கு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
றம்பொடை நீர்வீழ்ச்சியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக ரம்பொட நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.