உலகிலேயே பிரசவத்துக்கு ஆபத்தான இடங்களில் வடகிழக்கு கென்யாவின் மண்டேரா பகுதியும் ஒன்று.
அங்கே சராசரியாக, ஒரு லட்சம் தாய்மார்களில் 3800 பேர் பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர்.
போர் பிரதேசங்களில் இருப்பதை விட மோசமான நிலைமை இது.
அதே சமயம் உலகிலேயே பிறப்பு விகிதம் அதிகமான இடமாகவும் இது இருக்கிறது.