தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய பெருமழையின் விளைவாக வெள்ளக்காடாக மாறியுள்ள சென்னை நகரின் நிலைக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டுள்ள அமிதாப் பச்சன், வெள்ளநீரில் சென்னை மூழ்கிக் கிடக்கின்றது. அனைவரின் பாதுகாப்புக்காகவும், அங்கு இயல்புநிலை திரும்பவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். சென்னை மக்களுக்கு உரிய காலத்தில் கிடைத்துவரும் உதவிகள் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், நடிகையுமான டியா மிர்ஸாவும், ’வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மீள்வதற்கு உதவிபுரியும் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். இதே மனிதாபிமானம் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளிலும் மிளிர வேண்டும் என விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர், அபிஷேக் பச்சன், பர்ஹான் அக்தர், நடிகை ரவீணா டான்டன், பரினீட்டி சோப்ரா உள்ளிட்ட இதர பாலிவுட் பிரபலங்களும் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.