பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளால், உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மோசமான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
எனவே உலக அளவில் விலங்குகளுக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
அளவுக்கதிகமாகவும் அனாவசியமாகவும் பண்ணை விலங்குகளில் நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் மருந்துக்கு கட்டுப்படாத கிருமிகள் உருவாகிவிடுவதாக ஆய்வு கூறுகிறது.