முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை விதித்துள்ளதன் பின்னணியில் இரான் சவுதி இடையில் ராஜீயத் தகராறும் பதற்றமும் மேலோங்கிவருகிறது.
ஷியா மதகுருவின் மரண தண்டனைக்கான பழிவாங்கலாகத் தெரியும் சம்பவங்களில், இராக்கில் சுன்னி மதபோதகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், இரண்டு சுன்னி பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.
தெஹ்ரானுடன் சவுதி அரேபியாவும் வேறு சில நாடுகளும் ராஜீய உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளன.
இரானிலுள்ள தமது தூதரகங்கள் தாக்கப்பட்டதை அடுத்து அந்நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கை இது.