அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கெய்னஸ் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் நடவடிக்கைகள் சமீபகாலமாக மர்மமாக இருப்பதால் அவர்மீது சந்தேகப்பட தாயார், மகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார்.
அவ்வபோது, தனது அறையின் கதவை மூடி, தாளிட்டுக்கொள்ளும் அந்த சிறுமி எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதியாக கிடப்பதை கண்டு அவரது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அவள் வெளியே சென்றிருந்தபோது மகளின் கம்ப்யூட்டரை ஆராய்ந்த தாயார் திகைத்துப் போனார். இதுதொடர்பாக, அவர் போலீசில் புகார் அளித்ததால் அந்த சிறுமியை போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
இணையதளம் மூலமாக அவளுக்கு அறிமுகமான சிலர், தாங்களே நிர்வாணமாக தங்களை ‘செல்பி’ எடுத்து அவற்றை விற்பனை செய்யும் பிரபல இணையதளங்களை பற்றிய விபரங்களை அவளிடம் கூறியுள்ளனர்.
அன்றிலிருந்து சுமார் ஓராண்டுகாலமாக தன்னைத்தானே பலவிதமான நிர்வாண கோலங்களில் செல்பி எடுத்துத்தள்ளிய அந்த சிறுமி சுமார் 20 முதல் 100 டாலர்கள் விலைக்கு அவற்றை மின்னஞ்சல் மூலமாக ‘வாடிக்கையாளர்களுக்கு’ விற்று இதுவரை சுமார் 1100 டாலர்களை சம்பாதித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக இதுபோன்ற குற்றங்கள் பெருகிவருவதாக குறிப்பிட்டுள்ள போலீசார், அந்த சிறுமிக்கு மனநல மருத்துவமனையை சேர்ந்த உளவியல்துறை மருத்துவர்கள் கவுன்சலிங் அளித்துவருவதாக கூறுகின்றனர்.