சந்தானம் தன் கவுண்டர் வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தற்போது காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் களத்தில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டார்.
இவர் அடுத்து ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
இப்படம் பேய் படமாம், ஏறகனவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் பேய் படங்களாக வர, தற்போது சந்தானத்தையும் பேய் பிடித்து விட்டது.