அவளை விட்டு பிரியும் தருணம்.. நான் போய்ட்டு வரேன்டா.. என் கரங்கள் பிடித்தாள்.. எனதுகைகளில் விழுந்தது ஒரு துளி கண்ணீர்.. அது இன்னும் ஈரமாய் எனது கண்களில்.. பிரியும் நேரங்களில் வார்த்தைகள் ஏனோ ஊமையாகின்றது.. கண்ணீரை பேச சொல்லிவிட்டு.. பிரியா
நான் கவிதை எழுதினேன் !!!! ஆனால் முடியவில்லை !!!! கேள்விக் குறியாய் நின்றது !!!! இறுதியாய் !!!! நீ முடித்து வைத்தாய்!!!! இதற்குத் தான் சொல்வார்களா!!!! நீ பாதி !!!!! நான் பாதி என்று !!!!
தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு…..!! பிரியா
நீர் கால்கள் குற்றும் என் உள்ளங்கையின் உயர் பீடங்களினை ஏந்திக் கொள்கிறேன் உனக்காய் .. தடக்காமல் தளராமல் நடந்து வா .. நீர் உனைப் பற்றியிழுத்து உன் பாகம் மேயலாம் ! காற்று உன்னைக் கட்டியனைத்து காதல் மொழி பேசலாம் ! கற்கள் காமம் கொண்டுன் கழுத்து