தமிழ் சினிமாவில் தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா. இவர் நடிப்பில் வெளியான ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012ம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜெனிலியாவுக்கு 2014ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரியான் என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் ஜெனிலியாவிற்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று பிரசவ வலி ஏற்பட்டதும் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜெனிலியாவும் குழந்தையும் நலமாக இருப்பதாக ரித்தேஷ் கூறியிருக்கிறார்.
இந்த தம்பதியருக்கு இந்தி மற்றும் தமிழ் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.