உலக நாயகன் கமலஹாசனுடன் இனிமேலும் சேர்ந்து வாழப்போவதில்லை என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
இதனை அவரே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், உருக்கமான கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
அதில் கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும் மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்து இரண்டு வருடங்களாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்ததாகவும், வாழ்க்கையில் எடுத்த மிக கடுமையான முடிவு இது எனவும் தெரிவித்துள்ளார்.