மலையாள சினிமா உலகில் சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த நிகழ்வு பெரும் விசயமாக உருமாறியது. குற்றவாளிகளும் பிடிபட்டனர். இன்னும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது அதே போல ஒரு சதி பிரபல மாடலிங் நடிகை மெரீனா மைக்கேலுக்கு நடந்துள்ளது. இவர் தமிழில் டெல்லி கணேஷ் மகன் மஹா நடித்த என்னுள் ஆயிரம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரிடம் ஒருவர் தன்னை தயாரிப்பாளாராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரபல நகைக்கடையின் பெயரை கூறி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்றும், நள்ளிரவில் தான் ஷூட்டிங் நடக்கும் என்றும் கூறியுள்ளார். உடனே மெரினா ஷூட்டிங் எங்கு நடக்கிறது என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் சரியாக பதிலளிக்காமல் உடனே வீட்டிற்கு கார் வரும் என்று சொல்லியிருக்கிறார். இதனால் சந்தேகமான மெரினா உடனே நகைக்கடை அதிபரை தொடர்பு கொண்டு விசயம் குறித்து கேட்டுள்ளார்.
அப்படி எதுவும் இல்லை என விசயம் தெரிந்ததும் சதி என்ன என்பதை கண்டுபிடிக்க அமைதி காத்துள்ளார். இந்த உரையாடலை ஃபேஸ்புக்கிலும் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடைசியில் அந்த நபர் ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது என கூறியுள்ளார். இது போல யாருக்கும் நடந்துவிடக்கூடாது என அவர் தனக்கு நடந்ததை விளக்கமளித்துள்ளார்.