அது, உலகிலேயே மிகவும் குளிரான இடம்; அந்நாளின் மிகவும் குளிரான நேரத்தில், கடலிற்கு 3500மீட்டர் உயரமானது. குளிர்காலத்தின் மத்தியில், அங்கு வெப்பநிலை, மைனஸ் 30 டிகிரியை தொடும்.
இமய மலையின் மேலே, இந்தியாவின் வடக்கில் உள்ள, லடாக் பகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, 10 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர்.
அங்கு சில பெரிய கட்டிடங்களின் மேல் 30 அடிகளுக்கு உயரமான பனிப்பாறைகள் உள்ளன, வசந்தகாலத்தின் ஆரம்ப கட்டத்தில் அவை உருகி, அங்குள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
இந்த பனி வடிவங்கள், சோனம் வாங்சுக் என்பவரின் யோசனையில் உருவானவை. லடாக்கில் பிறந்த இவர், உள்ளூர் மக்களின் அன்றாட பிரச்சனையை சரிசெய்ய பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
“நாங்கள், நியூயார்க்கிலும், புது டெல்லியிலும் கிடைக்கும் தீர்வுகளை பெறுகிறோம். ஆனால் அவை இந்த பெரிய மலைப்பகுதிகளில் வேலை செய்யாது. மலைப்பகுதியில் உள்ள மக்கள், தாங்களே தங்களின் தீர்வை கண்டறிய வேண்டும் என நான் நம்புகிறேன்”, என்கிறார் அவர்.
லடாக் மக்கள் பல கடினமாக சூழலை எதிர்கொள்கின்றனர். பனிக்காலத்தில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுவது என்பது, பனிக்காலம் முழுவதும் அவர்களை, மீதமுள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து பிரிப்பதாகும்.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள், பிரச்சனையை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். புவி வெப்பமயமாதலின் அறிகுறிகள், ஹிந்து குஷ் இமயமலை பகுதிகளின், மென்மையான சூழலை பாதிக்கிறது என்கிறார் அவர்.
“எங்களால், பனிப்பாறைகள் உயரமான பகுதிகளை நோக்கி விலகுவதை பார்க்க முடிகிறது. வசந்த காலத்தில் மிகவும் குறைவான தண்ணீர் இங்கு உள்ளது. ஆனால், கோடை காலங்களில் நாங்கள் பயங்கரமான வெள்ளத்தை அனுபவிக்கிறோம். இந்த பள்ளத்தாக்கில் ஓடும் நீர் மிகவும் ஒழுங்கற்ற வகையில் பாயும் நிலையில் ஓடும் நிலைக்கு வந்துவிட்டது” என அவர் விளக்குகிறார்.
வாங்சுக், அதே பகுதியில் இருக்க கூடிய செவிங் நோர்பல் என்பவரின் பணிகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். நோர்பல், தட்டையான செயற்கை பனிப்பாறைகளை நான்கு ஆயிரம் அடி மீட்டர் மேலே உருவாக்கினார். ஆனால், அவ்வளவு உயரத்திற்கு சென்று தண்ணீர் கொண்டுவர, மக்கள் தயக்கம் காட்டினர்.
ஒரு பாலத்தை கடந்துகொண்டு இருந்த போது, தனக்கு இந்த பனிப்பாறைகள் குறித்த யோசனை தோன்றியதாக கூறுகிரார் வாங்சுக். “நான் பார்த்தபோது, அந்த பாலத்திற்கு கீழே 3,000 மீட்டரில் பனி இருந்தது. அதுவே, அந்த பகுதியில் மிகவும் தாழ்வான, கதகதப்பான பகுதியாகும்” என நினைவு கூர்கிறார்.
“இது மே மாதம். ஆக, நேரடியாக சூரிய ஒளி பட்டால் இந்த பாறைகள் உருகிவிடும். ஆனால், இதன்மீது சூரிய ஒளி படாமல் பாதுகாத்தால், இங்கு பனியை சேமிக்கலாம் என நான் யோசித்தேன்”, என்றார்.