வித்யா பாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் இவர் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் Tumhari Sulu என்ற ஹிந்தி படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவர் சில அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதில் ‘நான் முதன் முதலாக என் அப்பாவுடன் ஒரு ஆடிஷன் சென்றிருந்தேன்.
அப்போது அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்க்க, உடனே நான் கோபமாக ‘என்ன’ என்றேன், அவர் உடனே தன் பார்வையை மாற்றினார், அது தான் எனக்கு ஏற்பட்ட முதல் பாலியல் தொல்லை’ என கூறியுள்ளார்.